` Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


செவ்வாய், 10 ஜனவரி, 2017

அறிவை அறிவால் அறிந்துகொள்ளும் அறிவுத்திருக்கோவில் .

திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் கர்னல் கணேசன் அமைத்துவரும் "அகத் தூண்டுதல் பூங்கா "பற்றி வாசகர்கள் அறிவார்கள்.இந்த பூங்காவில் ஒரு கலந்துரையாடல் இடம் , ஒரு தியான மண்டபம் மற்றும் ஒரு நூல் நிலையம் இருக்கும்.
இட நெருக்கடி காரணமாக ஒரே கட்டிடத்தில் கீழே நூல் நிலையமும் மேலே தியான மண்டபமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நான்கு வழிப்பாதையான மயிலாடுதுறை -திருவாரூர் சாலையில் சன்னாநல்லூரின் எல்லையில் வலது புறமாக அமைந்துள்ளது இந்த வளாகம் .
நூலகம் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் பொது மக்கள் உபயோகத்திற்கு திறந்து விடப்படும்.
சன்னாநல்லூரின் சுற்றுவட்டார பகுதிகளில்யாராவது ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் நூலகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நன்றாக இருக்கும்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968